Thursday, November 24, 2011

தயாரிப்பாளர் பிடியில் நடிகை (இது தாண்டி சினிமா-3)


அத்தியாயம் 3



தயாரிப்பு நிறுவனங்களில் பாரம்பர்ய நிறுவனம் அது! அந்த நிறுவனத்தின் மூத்த வாரிசு மிக சாந்தமானவர். அவரின் உடை ஸ்டைலும், பணிவும் ரொம்ப பிரசித்தமானது. அவர் அதிகம் வம்புதும்பு செய்திகளில் சிக்காதவர். என்றாலும்....

ஒரு இளம் நடிகயை தன் அந்தரங்க தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார். அந்த நடிகையின் குடும்பத்திடமிருந்து நடிகையை பிரித்து தன் சின்ன வீடாகவே வைத்துக் கொண்டு விளையாட்டுக்காட்டினார்.

‘மாட்டு வண்டி’ பாட்டு படத்தில் அவதார நடிகரின் தங்கையாக நடித்தார். அதிலிருந்து தமிழ் சினிமாவில் அவர் தங்கையாக நடிப்பது தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது.

துறுதுறுப்பான அந்த இளம் நடிகையின் அகண்ட கருவிழிகளில் மனதை பறிகொடுத்து விட்டார் தயாரிப்பாளர். முதல் சந்திப்பே அவருக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. தனது இமேஜ் கெடாமல்... அதே சமயம் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள... தகுதியான பெண் இவள்தான் என முடிவு செய்தார். காரணம்... அழகும், இளமையும், திறமையும் இருந்தாலும் அந்த நடிகை மிகமிக அப்பாவியாக வெள்ளந்தியாக இருந்தது. சூதுவாது தெரியாத அந்த நடிகையை தன் தோதுவாதுக்கு இழுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தார்.

நியாயமான சம்பளம் மட்டுமே கொடுத்துப் பழகிய அந்த தயாரிப்பாளர் இந்த நடிகைக்கு கூடுதல் சம்பளம் கொடுத்தார். ஏன் நீயும், உன் குடும்பமும் ரொம்ப கஷ்டப்படுறீங்க? நான் பெரிய பங்களா புடிச்சு தர்றேன். அங்கயே குடியிருந்துக்கலாம் என அந்த நடிகையின் குடியை கெடுக்க முதல் திட்டம் போட்டார் தயாரிப்பாளர். அந்த அப்பாவி நடிகையும் அந்த வீட்டில் குடும்பத்தோடு குடியேறினார்.

அவ்வப்போது அந்த வீட்டில் தயாரிப்பாளர் ஆஜராகி விடுவார். சினிமாவில் பெண்கள் நிலைப்பாடு என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு வந்த அந்த பெற்றோர்.. தயாரிப்பாளர் வருகிறபோது ஒரு அறைக்குள் போய் முடங்கிவிடுவார்கள். இப்படி போய்க்கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் வெளிப்படங்களில் நடிக்க விடாமல் கம்பெனி ஆர்டிஸ்ட்டு போல ஆக்கிவிட்டார் தயாரிப்பாளர். இதனால் நடிகையின் பெற்றோருக்கும், தயாரிப்பாளருக்கும் மனஸ்தாபம். ஆனால் நடிகையோ தயாரிப்பின் கட்டளையை மீறமுடியாமல் கை கட்டி நின்றார்.

வருஷங்கள் கடந்தது. நடிகைக்கு சினிமாவில் வாய்ப்பே இல்லை. தயாரிப்பும் தயாரிப்பு பணியை நிறுத்தி வைத்தது. நடிகையின் இளமையும் கொஞ்சகொஞ்சமாக தீர்ந்து கொண்டிருந்தது.

‘நடிச்சது போதும், மகளுக்கு திருமணம் செய்துவைக்கலாம் என முடிவு செய்தார்கள். மாப்பிள்ளை தேடும் படலமும் நடந்தது. விஷயமறிந்த தயாரிப்பாளர் .... தொடரை மேலும் தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

www.kollyglitz.com/news/ithuthandicinema/episode3.asp


Subscribe to get more videos :