Monday, November 7, 2011

தூக்கு தண்டனையை எதிர்த்து 47வது நாளாக உண்ணாவிரதம்...!!!

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் மரணதண்டனையை ரத்து செய்யவேண்டி தொடர் பட்டினி போராட்டம் சென்னை கோயம்பேட்டில் நடைபெற்று வருகிறது.
தொடர் பட்டினிப் போராட்டம்செப்டம்பர் 22 அன்று ஆரம்பித்த இந்த தொடர் பட்டினி போராட்டம் 47வது நாளாக தொடந்து நடைபெற்று வருகிறது. 

அரசியல் கட்சி பிரமுகர்கள்,  திராவிட இயக்க ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள், ஓவியர்கள், சமூக ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனைவாதிகள், இலங்கை தமிழர் நலனில் அக்கறை உள்ளவர்கள், மாணவர்கள், மேலும், கட்சி சார்ந்த மற்றும் கட்சி சாராத அமைப்புகள் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்புகள் கலந்து கொண்டு மரண தண்டனைக்கு எதிரான தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
தொடர் பட்டினிப் போராட்டம்
இது வரை கலந்துகொண்ட அமைப்புகளின் விவரம் அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்... http://www.tamilcinema.com/general/interview/PattiniePorattam.asp

Subscribe to get more videos :