நடிகர் கார்த்தி அதிக நாட்கள் நடித்த படங்கள் பருத்தி விரனும், ஆயிரத்தில் ஒருவனும்.
இதில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பயணம் தொடரும் என்று படம் முடிக்கப்பட்டது. ஆகையால் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் நிச்சயம் உண்டு என்று ரசிகர்களுக்கு புரிந்திருக்கும், அது தற்போது உறுதி
செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநர் செல்வராகவன் அவரது டிவிட்டரில் கூறியிருப்பதாவது “ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டது. இன்னும் சில தினங்களில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதெல்லாம் இருக்கட்டும். ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானபோது படத்தை பற்றி பல்வேறு விமர்சனங்கள் பேசப்பட்டன, பொதுவாக திருட்டு விசிடி பார்ப்பவர்கள் நல்ல படம் வந்தால் அதை திரையரங்குகளில் போய் பார்ப்பதை விட டிவிடி வாங்கி ஒரு ஊரே பார்த்து விடுகிறது. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படம் இருட்டாவே தெரிந்ததால் திருட்டு விசிடிகாரர்கள் கூட இந்த படத்தை வெளியிட மறுத்து விட்டதெல்லாம் அப்பால செய்தி.
இருந்தாலும் பரவாயில்ல வாழ்த்துக்கள் செல்வராகவன். உங்கள் அடுத்த படைப்புக்காக காத்திருக்கிறோம்..