Wednesday, November 9, 2011

செல்போனில் படம் எடுத்து பிரச்சனையை கிளப்பிட்டாங்கன்னா.. த்ரிஷா..!!!


தன்னை ஆசை, ஆசையாய் பார்க்க வரும் ரசிகர்களை தன்னை செல்போனில் படமெடுக்க த்ரிஷா அனுமதிப்பதில்லை.



நடிகை த்ரிஷாவைப் பார்க்கப் போனால் அவர் பல நிபந்தனைகள் போடுகிறார். அட நம்ம த்ரிஷா என்று அவரைப் பார்த்தும் அருகில் செல்லும் ரசிகர்களிடம் அவர் சொல்லும் முதல் வார்த்தை தயவு செய்து செல்போனில் படம் எடுக்காதீர்கள் என்பது தான். ஆசை, ஆசையாய் வந்தா இவங்க என்ன இப்படி பேசுறாங்களே என்று ரசிகர்கள் நொந்து கொள்கின்றனர்.



சரி படம் எடுக்கல. ரூபாய் நோட்டுல ஒரு ஆட்டோகிராப் போட்டுக் கொடுங்களேன் என்று கேட்டால் அதெல்லாம் முடியாது என்கிறாராம். சரி ஒரு பேப்பர்லயாவது ஆட்டோகிராப் போடுங்க என்றாலும் முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்கிறாராம். இது என்னப்பா இந்த த்ரிஷா இத்தனை பவுமானம் பண்ணுது என்று ரசிகர்கள் முணுமுணுக்கின்றனர்.



செல்போனில் படம்பிடித்துச் சென்று அதை வைத்து ஏதாவது பிரச்சனையைக் கிளப்பிவிட்டுட்டாங்கன்னா என்ன செய்வது என்று த்ரிஷா பயப்படுகிறார் போலும். அது சரி சும்மாவே த்ரிஷா பெயர் எதுலயாவது அடிபடுவதால் அவர் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறார் என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான்.

Subscribe to get more videos :