ஊரெங்கும் பேச்சு, ஒரு கோடி டவுன்லோடு என்று ‘வொய் திஸ் கொலவெறிடி’ பாடலுக்கு திரும்பிய இடமெல்லாம் வரவேற்பு. இந்த அதிகப்படியான வரவேற்பை கண்டு ஆடிப் போயிருக்கிறார்கள் தனுஷும், ஐஸ்வர்யாவும். ட்யூன், மற்றும் வரிகளுக்கு இணையான பிரசன்டேஷன் இல்லையென்றால் அத்தனை பெருமைக்கும் குட்டு விழுமல்லவா? அதனால்தான் அப்படியொரு பதற்றம் அவர்களுக்குள்.
சுமார் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்த பின்பும் இந்த பாடலை படமெடுக்காததன் காரணம் இதுதானாம். படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜுடன் உட்கார்ந்து நாள்தோறும் யோசித்து வருகிறார்களாம் இருவரும். ஆனால் உருப்படியான ஒரு வடிவம்தான் கிடைக்கவில்லை இன்னும்...
மேலும் படிக்க...