டிசம்பர் 9 ந் தேதி சிம்பு நடித்த ஒஸ்தி திரைப்படத்தை வெளியிடுவதாக முடிவு செய்திருக்கிறார்கள் அப்படக்குழுவினர். ஆனால் இதற்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்த சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் எடுத்த முடிவை கடந்த வாரம் அறிக்கையாக வெளியிட்டிருந்தார்கள். அதில் கூறப்பட்டிருந்த தகவல் இதுதான்.
சன் பிக்சர்ஸ் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை சன் நிறுவனம் ஏற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இல்லையென்றால் சன் பிக்சர்ஸ் வெளியிடும் படங்களையோ, விநியோகம் செய்யும் படங்களையோ, அவர்கள் சாட்டிலைட் உரிமை பெற்ற படங்களையோ திரையிட மாட்டோம் என்று..
மேலும் படிக்க...