நாகார்ஜூனா, கார்த்தி நடித்துள்ள படம் ‘தோழா’. இதில் முதலில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டவர் திடீரென்று விலகுவதாக அறிவித்தார். பட குழு தடுமாறியது. ஸ்ருதியை வைத்து காட்சிகள் திட்டமிடப்பட்ட நிலையில் அவர் திடீரென்று நடிக்க மறுத்ததால் பிரச்னை எழுந்தது. தயாரிப்பாளர் சங்கம், போலீஸ் வரை பட தயாரிப்பாளர் சார்பில் புகார் அளித்தார். பிறகு இருதரப்புக்கும் ஏற்பட்ட சுமூக பேச்சுவார்த்தை பிறகு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஸ்ருதி நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்க முன்வந்தார். உடனடியாக அவரது கால்ஷீட் பெற்று படப்பிடிப்பு நடத்தி முடித்தனர். படம் திரைக்கு வந்து ஹிட் ஆனதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். இரண்டு ஹீரோக்கள் நடிப்பதால் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்காது என்று எண்ணியவர் படத்தில் தமன்னாவுக்கு நடிக்க கிடைத்திருக்கும் வாய்ப்பு மற்றும் அவரது காஸ்டியூம்களை கண்டும் சோகத்திலிருக்கும் ஸ்ருதி தான் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் தமன்னா நடித்து பெயரை தட்டிக்கொண்டு சென்றதால் பெரிய வாய்ப்பை இழந்த மன உளைச்சலில் இருக்கிறாராம்.